Monday, February 22, 2010

சிந்தனைச் சிறகுகள் !



சிந்தனைச் சிறகுகள் !


சிந்தனைச் சிறகுகள் சிறகடிக்கின்றன

சிந்தனை என்ற சொல் கேட்டு- என்

சிந்தனைச் சிறகுகள் சிறகடிக்கின்றன!

வணக்கம் என் வணக்கம்- என் கண்மணி வணக்கம் !


மலர்ந்தேன் நான் ! கமலமென மலர்ந்தேன் யான் !

சிந்தனைச் சிறகுகள் தலைப்பினைக் கண்டே !

இக் காவிரி நாடன் விரிந்தான் - வியந்தான்

சிந்தனைச் சிறகுகள் முளைக்க -முகிழ்க்க

முகிழ்த்தன இறக்கைகள் எனும் தமிழார்வம் !


குன்றேறி சிராப்பள்ளிக் குன்றேறிப்

பறந்து வந்தது இப்பறவை !

தமிழ்ப்பறவை ! தஞ்சைப் பறவை !

தஞ்சைசார் பறவை !


விஞ்சு புகழ் கொசு தமிழ்க் குலவிவர

விண்முட்டும் பெருங்கோயில் -தஞ்சைப்பெருன்கோயில்

மீதமர்ந்தே வளர்ந்த இப்பறவை தமிழ்ப் பறவை

சிலிர்த்தெழுந்தே வந்தது இத்தமிழ்ப்பறவை !


வங்கிப் பணி ! சங்கப்பணி ! தொழிற்சங்கப்பணி !


வேறறியா வெறும் பற்றாளன் ! தமிழ்ப் பற்றாளன் யான் !


அதுவே தகுதி ! அதுவே தகுதியாயின் !


எதுகை மோனை சீர் தளை சந்தம் தேடாது

விரியட்டும் உங்கள் சிந்தனைச் சிறகுகள் !


வண்ணப் பறவைகள் சிறகடிக்கின்றன தமிழ்

வண்ணப் பறவைகள் சிறகடிக்கின்றன - தமிழ்

எண்ணப் பறவைகள் சிறகடித்து சிந்தனைத் தேன்

வண்ணச் சிதறலாகி சிந்தனை சிறகடிக்கின்றன !


வண்ணச் சீரடி மண் மகள் அறிந்திலள் தமிழ்

வண்ணச் சீரடிகொடுத்தவனும் அவனே - தமிழ்

எண்ணச் சீரடி இளங்கோவடிகள் அவனே 
கண்ணகியைக் கற்புக்கொரு கண்ணகியைக் காட்டியவனே !


சிந்திக்கிறவன் மனிதன் ! சிந்திக்க வைப்பவனும் அவனே !

சிந்திக்க மறுப்பவனோ மிருகம் ! நிந்திப்பவனும் அவனே !

சிந்திப்பவனை நிந்திப்பவனும் அவனே !

ஆயின் மிருகமஅன்றோ அவனே !


சிந்தனைக்கு கால நேரமுண்டோ ? எல்லையுமுண்டோ !

எழிலார் சிந்தனைக்கு ? மொழியில்லை ! பழியும் உண்டே -சிந்தனைக்கு

உண்டு அவன் கால நிந்தனை ! காலம் கடந்த வந்தனை உண்டு சிந்தனைக்கு!

இறையானான் மண்தனுக்கு இரையான பின்தானே !


கல்லால் அடித்தான் அவனை - கலிலியோ கலிலி

செத்தும் ஒழிந்தான் அவன் கல்லால் அடிபட்டு

கொடும் நஞ்சன்றோ பரிசு - ஏதென்சு சாக்ரடீசுக்கு

சொல்லால் அடித்தான் அவனை - ஆர்கிமிடீசு அவனே !


ஒழித்தார்கள் இவர்களை ! ஒழிந்தார்கள் இவர்களும் இவன்களும்

ஆனாலோ அவன் கண்டு பிடிப்புகளும் சொல்லிட்ட கண்டிட்ட

தத்துவங்களும் ஒழியவில்லை ! அழியவில்லை !

சாக வரம் பெற்ற இவர்களோ நிலத்து வாழ்கிறார்கள் !


இறைவனையும் மறுத்தான் ! இறைவனையே

மறுத்தான் இன்கார்சால் - மறுத்தான்

இங்கு ஒரு சால் ! சால் நிறை பெரியார்

இங்குமொரு பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார் !


புதுமைப் பெண் கண்ட பாரதியோ கூறுகிறான் கூவுகிறான்

நாணும் அச்சமும் நாய்கட்கே வேண்டுமாம்

வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்

வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம் என

விடுதலைக் கும்மி அடிக்கிறான் !

பெண் விடுதலைக் கும்மி அடிக்கிறான் !


கூறியவன் பாட்டுக்கொரு புலவன் பாரதி

கூவியவன் புரட்சிக்கவியவன் - பாரதி

சிந்தனைச் சிறகுகள் முகிழ்த்த

சிந்தனைக் கவியவன் ! கவிச் சித்தனும் அவனே !


வாழ்கிறார்கள் ! இவர்கள் வாழ்கிறார்கள் !

கொள்கைகளில் ! இவர்தம் கொள்கைகளில் !

கொடியவர்கள் அவர்கள் ! கல்லால் அடித்தக் கொடியவர்கள் !

சொல்லால் அடித்த கொடியவர்கள் !


ஆனால் நாமோ கல்லறைக்கு வணக்கம் சொன்னோம் !

அவர்தம் சிந்தனைக்கு மலர் வளையம் கண்டோம் !

ஆனால் நானோ விளிக்கிறேன் உங்களை !

சிந்தனைச் சிறகுகள் விரித்த உங்களை !

அழைக்கிறேன் ! சிந்தனைப் பறவைகளே !


வாழும்போதோ கல்லடி! சொல்லடி!

பாராட்டும் சீராட்டும் வாழ்வு மடிந்த பிறகோ !

வேண்டாம் இந்தப் பொய் முகம் ! வேண்டாம்

பொய் நிறை நடப்பு ! நடிப்போ நடிப்பு !


எந்தனைக் கேளிர் ! எந்தனைக் கேளிர் !

வருகவென அழைக்கின்றேன் ! வாருங்கள்!

தருகவென அழைக்கின்றேன் தாருங்கள் !

தருவோம் மலர்ச்செண்டை வாழும்போதே !


கூறுங்கள் தெய்வமென்றே ! சிந்தனையே தெய்வமென்றே !

காணமுடியாது ! காணமுடியாது ! தெய்வத்தினையே !

சிந்தனையைக் காணமுடியாது கண்ணால் !

மனக்கண்ணால் காணமுடியும் தெய்வத்தினையே !

உணரமுடியும் அதனையே ! உணரமுடியும் சிந்தனையையே !

மனக்கண்ணால் உணரமுடியும் ! ஒன்றன்றோ இரண்டும் !


வேண்டாம் சிந்தனை ! வேண்டாம் சிந்தனை !

வேண்டுவதோ முயற்சி ! வேண்டுவது எண்ணம் !

சிந்திக்கவென்றே ! பிறக்கின்றான் சிந்தனையாளனும் !

முகிழ்க்கின்றன சிந்தனைச் சிறகுகள் !


மடை திறந்த வெள்ளமன்றோ ! சிந்தனை மடை திறந்த வெள்ளமன்றோ !

மடைதிறக்க வேண்டாவோ ! மனமெனும் மடைதிறக்க வேண்டாமோ !

சிந்தனை வெள்ளமெனப் பாய சிந்தனை வெள்ளமெனப் பாயும் !

சிந்தனைச் சிறகுகளே ! சிந்தனைச் சிறகுகளே !


2 comments:

செம்மல் said...

அன்புள்ள நண்ப
தங்கள் வலைப்பூ நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக மெருகு ஏறி மணம் பரப்பி வருகிறது.
தமிழின் தொன்மை, தமிழரின் தொழில் நுட்ப அறிவு
கற்பனைச் சிறகுகள், காவிரி ஆற்றில் மணல் கொள்ளை
ஆகிய பொருள்களில் தங்கள் எண்ணங்களையும்
கருத்துகளையும் வலைப்பூவின் வழி தெரிவிக்கும்
அழகு சிறந்து விளங்குகிறது.
ஓங்கலிடைவந்து உயர்ந்தோர் எனும் தொடங்கும் தனிப்பாடலில்
பரிதியும் கடலும் தோன்றிய காலத்தில் தன்னேரில்லாத
தமிழும் தோன்றி வளர்ந்தது எனும் கருத்தை அறிய
முடிகிறது.
எம்மனோற்கு சமயத்தின்பால் நாட்டம் இல்லை. ஆனாலும்
தேவாரம் திருவாசகம் திருக்குறள் நாலடியார் போன்ற
நூல்களைப் படிப்பது மிக தேவையான ஒன்று.
சிறப்பாகச் சொல்ல வேண்டுமெனில் நம் இளஞ்சிறார்கள்
மனப்பாடம் செய்து ஒப்புவித்துப் பழகவேண்டும். தமிழைத்
தெளிவாகப் பேசாத ஒரு அவல நிலைமைக்குக் கரணியம்
அம்மொழியைப் படிக்காமையே. தாய்மொழியைக் கற்காமல்
ஆய்வுப்பட்டமும்பெற முடியும் மேல்படிப்பும் கற்க முடியும் எனும் சூழ் நிலை
நம் தமிழ் நாட்டில்தான் உள்ளது. இத்தகைய இழி நிலையைப்
போக்க நாம் முனைதல் வேண்டும். இந்த அடிப்படையில்தான்
சைவத் திருமுறைகளை ஓதுவித்தல் நல்லது தேவையானது
என்னும் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
தொழில் நுட்ப அறிவு தமிழருக்கு ஏற்கனவே உள்ளது என்றும்
அதற்கு எடுத்துக்காட்டு கல்லணை என்றும் சொல்லிருக்கிறீர்கள்.
வியக்கத்தக்க ஒன்று. பெரிய கோவிலையும் கட்டிடக்கலைக்கு
எடுத்துக்காட்டலாம். இதுபோன்றே வேறு பல துறைகளில் அருஞ் செயல்கள்
யாவை என்பதையும் ஆராய்தல் நலம் பயக்கும்.
மிக மிக தேவையான உடனடியாக செய்யவேண்டிய வேலை என்னவெனில்
தமிழ் பயின்றால் வாழ்வு செழிப்பாக இருக்கும். வளம் பெருகும். எனும் சூழ்நிலையை
உருவாக்க முயலுதல் வேண்டும். எல்லாமே பொருள் சார்ந்த உலகம் என்று
ஆகிவிட்ட நிலையில் தமிழ் மொழி செல்வத்தைக்கொண்டு வரும் எனும்
நம்பிக்கையை ஏற்படுத்தும் நிலை வர ஆவன ஆற்ற வேண்டும்.
தமிழ் வழி கற்றோர்க்கே தமிழ்நாட்டு அரசில் பணி என்று சட்டம் கொண்டு
வரவும் வேண்டும். தமிழ் வழி படிப்போர்க்கு அனைத்து ஏந்துகளும்
வழங்கவும் வேண்டும்.இப்போழ்து ஆட்சி புரியும் அரசு ஆரவார விழாக்களில்
ஈடுபட்டு களி இன்பம் பெறுவதிலும் மக்களை மயக்கதில் ஆழ்த்தி வைப்பதிலும்
ஆர்வம் காட்டி வருகிறது. இப்போக்கு தமிழ் வளர்ச்சிக்கு எவ்வகையானும்
உதவாது.
அன்புடன்
செம்மல்

Anonymous said...

Dear uncle

The word Cauvery Naadan in your poem is very different. I think appa can add it in his list of Tamil Names for Newborns.

Mr.Semmal has also given a good brief on the present state of Tamil. We need to start by having Tamil in Entertainment, Relegion and Family functions (if its not possible in medicine, engg or education)

Will stay in touch with you thro the blog

ARIVUDAI SENTHIL