தமிழின் தொன்மை::
தமிழ்நாட்டில் 1987-இல் ஆளுநர் ஆட்சியின் போது காரைக்குடியில் கம்பனடிப்பொடி சா.கணேசன் நடத்திய கம்பன் விழாவில் தலைமையேற்ற ஆளுநர் பி.சி. அலெக்சாண்டர் தமது உரையில்,
" உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை வாழும் மொழிகள் நான்கு; அதில் நமது தாய்த் தமிழும் ஒன்று என உலக மொழியியல்
வல்லுநர்களின் ஆராய்ச்சியின் முடிவு".
"இலண்டனில் மேனாள் இந்திய தூதர் என்ற முறையில் , அனைத்துலக மொழியியல் வல்லுநர்களின் ஆராய்ச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட ஒரே இந்தியன் என்ற முறையில் நம் தாய்த் தமிழின் தொன்மைகேட்டு பெருமிதம் அடைந்தேன்"
என்று கூறினார்.
-
-
(1987-இல் சென்னைத் தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சி) .